குடிப்பதற்கு தண்ணீர் பிடிப்பததில் சிரமம்...

அமீரகத்தில் வசிக்கம் தமிழ்ச் சொந்தங்கள் வீட்டில் இயல்பாக நடக்கும்.. தண்ணீர் பிடுப்பதில் சிரமம்.. சில நேரங்களில் மனைவி தனியாக விட்டில் இருக்கும் நேரங்களில் 30லிட்டர் தண்ணீர் பாட்டலை தூக்கி டிஸ்பென்சரலில் ஊற்றுவது சிரமமான காரியம்... அதனால் மிக எளிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரம் AMAZON யில் கிடைக்கிறது வாங்கி முயற்ச்சித்து பாருங்கள்..

கொடைகாலம் தண்ணீர் முக்கியம்..

துபாயில் வசிக்கும் தமிழ்ச் சொந்தங்கள் தற்போது அமீரகத்தில் கோடைகாலம் தவறாமல் அரைமணி நேரத்திற்கு ஓரு முறை மறக்காமல் தண்ணீர் அருந்துங்கள்... தற்போது மை துபாய் தண்ணீர் சிறப்பு சலுகையாக AMAZON னில் கிடைக்கிறது...

இடைவெளி நூறு ஆண்டுகள்!!

1969. லாஸ் ஏஞ்செல்ஸ் கிரேஹவுண்ட் பேருந்து நிலையம்.
அப்பவே இப்படி.
அமெரிக்காவுக்கும் நமக்கும் இடையேயான முன்னேற்ற இடைவெளி நூறு ஆண்டுகள்.
அங்கே போய்ப் பாருங்கள் அப்போதுதான் புரியும்.

கொலைப் பசியோடு ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்திருந்தேன்!! உண்மையில் பெரும்பாலான கல்யாண ரிசப்சனில் இதான் நடக்கிறது!!

எழுதியவர்​ பேர் தெரியல.... சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துட்டுது... 

செம்ம செம்ம.... இவ்ளோ நகைச்சுவையா ஒரு விஷயத்தை விவரிக்க முடியும்னு தெரியும்போது.... 

எந்நேரமும் விறைப்பாவே திரியுற நமக்கு வெக்கமாத்தான் இருக்கு...

வாழ்தல் இனிது.... ரசித்து வாழ்தல் வரம்....
******** ********** *************
கொலைப் பசியோடு
ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்திருந்தேன்.

முதலில் பேப்பர் ரோலை உருட்டினார்கள் .

பின்பு இலைகளை முன்னே வைத்து சென்றார்கள்.

கால் மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் மட்டும் வைத்தார்கள்.

முதல் பந்தியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் தி.நகர் போன்று கூட்டம் நெறிய ஆரம்பித்தது.

நான் ஓர வரிசையில் அமர்ந்திருந்தேன். 

காத்திருப்பவர்கள் எனக்கு பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள் .

" வெறும் எலைய எம்மா நேரம்டா உத்து பாக்கறது .. சோத்த போடுங்கடா.."
சரக்கிலிருந்த பெருசு ஒன்று ஆரம்பித்து வைத்தது .

குலாப் ஜாமூன் , வெங்காய பச்சடி , உருளை சிப்ஸ் , வைத்த அடுத்த நொடியில் கபளீகரம் செய்தேன்.

என்னுடைய வரிசையில் கடைசி ஆள் வரை வைத்துவிட்டு திரும்பிய வெங்காய பச்சடிக்காரன் என்னைப் பார்த்து " பச்சடியைக் கூடவடா ..?" என்று மனதில் நினைத்தது அவன் முகத்தில் தெரிந்தது.

அடுத்தது சென்னாவும் , தேங்காய் சட்னியும் , வைத்தார்கள் .

" எப்பதாண்டா சோறு போடுவீங்க ..? "
மறுபடி பெருசு உருமியது.

" சார் தோசையும் சப்பாத்தியும் வந்துட்டே இருக்கு ..

அது வரைக்கும் அப்பளம் சாப்ட்ரீங்களா ..?"

அப்பளம் வைத்திருந்தவன் நக்கல் செய்கிறானா , இல்லை மனதில் இருந்துதான் கேட்கிறானா போன்ற ஆராய்ச்சிகளில் இறங்க என் பசி அனுமதிக்கவில்லை.

இதோ வருகிறது அதோ வருகிறது என்று அவர்கள் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த சப்பாத்தியும் தோசையும் வந்தே விட்டது .

படுபாவிகள், எதிர் வரிசையில் வைக்க ஆரம்பித்தனர்.

எனது இடத்திற்கு வரும்பொழுது தோசை தீர்ந்துவிட்டது.

ஒரே ஒரு சப்பாத்தி வைத்தான்.

" தம்பி தோசை வரல .."

" நான் சப்பாத்தி வைக்கிற ஆளு சார் .."

" தெரியுதுப்பா ..
அவர்கிட்ட சொல்ல முடியாதா ..?"

" உள்ள இருப்பான் சார் ..
போனதும் சொல்றேன் .." அவர் மீட்டிங்கில் இருக்கார் இப்போ பார்க்க முடியாது என்று என் காதில் விழுந்தது .

அதற்குள் சாப்பாடு வைக்க ஆரம்பித்தார்கள்.

" பாஸ் ஒரு கரண்டி வைங்க சாப்டுட்டு பொறவு வாங்கிக்கிறேன் " எனக்கு இலையில் டிராபிக் ஜாம் ஆனால் பிடிக்காது என்பதால் அப்படி சொன்னேன்.

" தம்பி அதெல்லாம் வேலைக்கு ஆகாது ,

இப்பவே மொத்தமா வாங்கிக்கங்க ..
அப்புறம் இவங்கள பிடிக்க முடியாது .."
பக்கத்தில் இருந்த அனுபவஸ்தர் கூறினார்.

அவர் கூறியபடியே மொத்தமாக வாங்கி , சாம்பார் , வத்தக்குழம்பு , ரசம் , மோருக்கு என நான்கு பாகங்களாக பிரித்து வைத்தேன்.

எனக்கு பின்னால் வெயிட்டிங்கில் இருந்தவர் அருகில் இருந்தவரிடம் எதோ சொல்லி சிரித்தார்.

அநேகமாக , டாப் ஆங்கிளில் எனது இலையில் நான்கு மலைச் சிகரங்கள் தெரிந்திருக்க வேண்டும் அவருக்கு.

சாம்பார் வாளிக்கு பின்னாலயே ரசம் வாளியும் வந்தது.

" இப்படி வந்தா ஒன்னு சேர வந்துட்றீங்க இல்லனா ஆளே காணாம போயிடுறீங்க ..

சாம்பார் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள எப்படிப்பா ரசம் சாப்பிடறது ..?"

" சாப்பிடலாம் .. சாப்பிடலாம் .."
எவனோ பின்னாடி இருந்து குரல் கொடுத்தான்.

திரும்பிப் பார்த்தேன், யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை.

" தம்பி, புரியாத ஆளா இருக்கீங்களே ..
ரசத்த இப்பவே வாங்கி வச்சுக்கோங்க .." அனுபவஸ்தர் வலியுறுத்தினார்.

ரசத்துக்கு என குவித்து வைத்திருந்த குன்றில் ஒரு குழி வெட்டி ரசத்தை அதில் ஊற்றச் சொன்னேன்.

" வத்தக் குழம்பு இல்லையா ..?"

" வரும் சார் .. " 'ஏன் பறக்குறீங்க' என்று கழுத்து வரை வந்து விட்ட வார்த்தையை நல்லவேளை முழுங்கிவிட்டான்.

" தம்பி உங்க ரசம் நம்ம இலைக்கு வருது பாருங்க " அருகில் இருந்தவர் சிரித்தபடி கூறினாலும் அது சிரிப்பதற்காகக் கூறியது அல்ல.

இதற்கு உடனடியாக ஆக்ஷனில் இறங்கியாக வேண்டும்.
மோர் குன்றில் இருந்து கொத்தாக சோற்றை அள்ளி, ரசம் லீக் ஆகும் இடத்தை சுற்றி ஒரு டேம் கட்டினேன் .
அவருக்கு பரம திருப்தி.

அடுத்து திடீரென்று காபி வைத்தார்கள் .

" இன்னும் ரசத்த கூட தாண்டலயேப்பா .. அதுக்குள்ள காபி வச்சா என்ன அர்த்தம் ?"

" சீக்கிரம் முடிச்சுட்டு எந்திரிக்கனும்னு அர்த்தம் .." மீண்டும் அதே குரல் பின்னாலிருந்து.

காபியை ஆறிப் போய் குடிப்பதும் , குப்பையில் வீசுவதும் ஒன்று.
காபியை இழக்க எனக்கு மனமில்லை.

ரசம் சாப்பிட்டுகொண்டே , நடு நடுவே காபியையும்
ஒரு சிப் இழுத்துகொண்டேன்.

புது காம்பினேஷன். நீங்களும் டிரை பண்ணுங்க மக்கா.

" இவன் இப்பத்தைக்கு முடிக்க மாட்டான் மாப்ள ..

வா அந்த லைனுக்கு போவோம் .."

அந்த இரண்டு பேர் இறுதியாக என்னிடம் தோற்று வெளியேறினார்கள்.

அடுத்து மோர் வந்தது. வாங்கி பிசைய ஆரம்பித்தேன்.

என் வரிசையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக இலையை மூடி எழ ஆரம்பித்தனர். 

இறுதியாக எனக்கு மிகவும் பிடித்த வத்தக் குழம்பும் வந்தது.

 இப்போது அநேகமாக அனைவரும் எழுந்து விட்டனர் , என் அருகில் அனைவரும் புது முகங்கள்.

ஆயம்மா பேப்பர் ரோலை சுருட்டிக் கொண்டே வந்தார். பாதி குன்றுதான் நான் முடித்திருந்தேன்.

என் அருகில் வந்ததும் , " பரவாயில்லை முடிங்க சார் " என்று கருணை கூர்ந்தார் . 

பரீட்சை ஹாலில் கறாராக பேப்பரைப் பிடுங்கும் ஆசிரியப் பெருமக்களே , ஆயம்மாவைப் பார்த்து படியுங்கள்.

வரிசையில் அமர்ந்திருந்த புது முகங்கள் அனைவரும் என்னைக் குரூரமாக பார்க்க ஆரம்பித்தனர்.

எனக்கு வெட்கமாய்ப் போய் விட்டது .

மீதமிருக்கும் வத்தக் குழம்புக் குன்றை பிரிய மனமில்லாமல் ,வாழைப் பழத்தை மேல் ஜோப்பில் போட்டுக்கொண்டு , இலையை மூடிவிட்டு
ஒரு கையில் ஐஸ் கிரீம்
மறு கையில் ஜாங்கிரியுடன் நான் எழ முற்பட்டபோது

" சார் .. இங்க யாருக்கோ தோச வரலயாமே .. உங்களுக்கா ? " என்ற குரல் உசுப்பேத்தியது.

திரும்பி அமர்ந்தால் அடி விழும் என்று தெரிந்ததால்,

" நான் இல்லப்பா .." என்று கூறிவிட்டு கை கழுவ சென்றேன்.

நிம்மதியா திங்கவிட மாட்றானுவ.....

உண்மையில் பெரும்பாலான கல்யாண ரிசப்சனில் இதான் நடக்கிறது.

உணவு வீணடிக்கப்படுகிறது.

- படித்து ரசித்தது. மிகவும் ரசித்தது

அமீரகத்தில் மெகா இஃப்தார்..

ஒரு தனிநபர் வழங்கிய அமீரகத்தின் மெகா இஃப்தார் அரபு ஊடகங்களில் இடம் பெற்ற நிகழ்வு நடைபெற்றது..
ஐக்கிய அரபு அமீரகத்தின் புகழ்பெற்ற கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனமான தனூப் குழுமத்தின் சேர்மன் ரிஸ்வான் சர்ஜுன் ஏற்பாட்டில் ஒரு லட்சம் பேருக்கு இஃப்தார் விருந்து வழங்கப்பட்டது.
யுஏஇ முழுவதும் தேர்வு செய்யப்பட்ட
14 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ப்ளூ ஷர்ட் தொழிலாளிகள், துப்புரவு பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளிகள் உட்பட ஒரு லட்சம் பேருக்கு உணவுகள் பரிமாறப்பட்டது.
முஸ்லிம் பணியாளர்கள் தங்களது முஸ்லிமல்லாத நண்பர்களையும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்து வர அனுமதிக்கப்பட்டனர்...
இதற்காக தனூப் குழுமத்தின் ஊழியர்கள் மேற்பார்வையில் சமையல் மற்றும் விநியோகம் செய்ய 4000 பேர் பணியமர்த்தப்பட்டனர்...

ஒரு குறுகிய அறிமுகம்...
-------------+++++-----------------------
தனூப் குழுமத்தின் சேர்மன் ரிஸ்வான் சர்ஜுன் மும்பையை சேர்ந்தவர்.
18 வயதில் மும்பை வீதிகளில் பத்திரிகை விநியோகம், அதிகாலை பால் போடுதல் போன்ற வேலைகளை செய்தவர்.
1990ல் துபாய் வந்து பல்வேறு வேலைகளை செய்தவர்.
1995ல் தனது சுய முயற்சியால் தனூப் குரூப் எனும் பெயரில் கட்டுமான பொருட்கள் சில்லரை விற்பனை துவங்கி படிப்படியாக முன்னேறிய ரிஸ்வான் சர்ஜுன், இன்று யுஏஇ முழுவதும் பிரபலமான
Danub Group of Company பெயரில் Building Materials விநியோக துறையில் முன்னணியில் இருப்பதுடன், 
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் அரபுலகின் 100 இந்திய முன்னணி தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சாதனையாளர்..
நன்றி Colachel Azheem

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகள் உலகம் முழுவதும் கடந்தாண்டு 345 மில்லியன் பிரதிகள் சவூதி அரேபியா மன்னர் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது...

தாய்லாந்து மக்களுக்கு 
சவூதி அரேபியா மன்னரின்
இந்தாண்டு ரமலான் அன்பளிப்பாக 
"தாய்"  பாஷையில் மொழிபெயர்க்கப்பட்ட சுமார் 50000 திருக்குர்ஆன் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள், தாய்லாந்து அரசு பிரதிநிதிகள் முன்னிலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.. 
சவூதி அரேபியா மதீனாவில் 
கிங் ஃபஹத் காம்ப்ளக்ஸில் அச்சடிக்கப்பட்ட திருக்குர்ஆன் தாய் மொழிபெயர்ப்பு பிரதிகள் மூன்று வெவ்வேறு அளவுகளில் அச்சடிக்கப்பட்ட தாகவும், பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பிரெய்லி வடிவிலான திருக்குர்ஆன் பிரதிகள் உட்பட மொத்தம் 50060 பிரதிகள் தாய்லாந்து அனுப்பி வைக்கப்பட்டது என்றும் சவூதி அரேபியா இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் அஷ்ஷேக் தெரிவித்தார்...

பல்வேறு நாடுகளின் 76 மொழிகளில் அச்சடிக்கப்பட்ட திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகள் உலகம் முழுவதும் கடந்தாண்டு 345 மில்லியன் பிரதிகள் சவூதி அரேபியா மன்னர் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது...
நன்றி Colachel Azheem

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிந்துகொள்வோம்....!!

1) பொதுவாக பாய் தரையில் விரிப்பதால்... நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்"
2) பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எழும்பு நேர்படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது, [கல்வி கற்க்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகு வலி வராமலும் தடுக்கும்,]

3) கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும், [பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எழும்பு விரிகிறது, இடுப்பு எழும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்]

4) மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வு,

5) பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து ஞாபக சக்தியை தருகிறது, [பாயில் தலையணி இல்லாமல் உறங்குவதே சிறந்தது,]

6) ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்,

7) பாய் உடல் சூட்டை உள் வாங்கக்கூடியது,

8) பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லா ஒரு சீர்வரிசை கிடையாது,

9) ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது,

10) கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்... *உடல் உஷ்ணம்,வதையும்...

*உடலின் வளர்ச்சி,யும்...

*ஞாபக சக்தி,யையும்...

*மன அமைதி,யும்...

*நீண்ட உடல் நலம் /மன ஆரோக்கியத்தையும் தருகிறது,

இரயில் ஓட்டுநர்கள் பற்றி, கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்:

இரயில் ஓட்டுநரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்றும் கூறுவார்கள். இன்றைய சூழ்நிலையில் அவர்கள் 13 மணி நேரம்வரை வேலை செய்கிறார்கள்.


சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு. குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை... அடுத்த பணிக்குத் திரும்புவதற்கு.

ஒரு இரயில் வண்டி ஓடாமல் சும்மா நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. 100 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது.

ஒரு இரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக் கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தைவிட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர்.

அதெல்லாம் சரி... இந்த இரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா..? அப்படித் தூங்கினால் எப்படி கண்டு பிடிப்பது..?

தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆனால் இரண்டு பேருமே தூங்க முடியாது, யாராவது ஒருத்தர் விழித்திருக்க வேண்டும்.

VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் அவர்களைத் தூங்க விடாது. ஏனென்றால் ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை அதில் உள்ள பொத்தானை அமுக்க வேண்டும்.

அப்படி அமுக்கவில்லை என்றால், எட்டு வினாடிக்குப் பிறகு விளக்கெரியும், அதையும் அவர்கள் உதாசீனப் படுத்தினால், அடுத்த எட்டு வினாடிக்கு சத்தமும் சேர்ந்து கொண்டு விளக்கெரியும், அதையும் உதாசீனப் படுத்தினால், வண்டி தானாகவே நின்று விடும், Automatic Braking System மூலம்.

ஆனால் அந்த பைலட்டுகள் வண்டியின் வேகத்தைக் கூட்டுவது, குறைப்பது, ஹரன் அடிப்பது போன்ற வேலைகளில் இருந்தால், அந்தப் பொத்தானை அமுக்க வேண்டியதில்லை.

இந்தக் காலத்தில்தான், பட்டன் போன்ற பொத்தானை அமுக்கிற வேலை, முன் நாளிலெல்லாம் ஒரு பெரிய கம்பியை இழுத்து இழுத்து விட வேண்டும். அதன் பெயர் “Deadman’s Lever”.

இன்று வரையில் இரயில்வே ஓட்டுநர்களுக்குத் தனியாகக் கழிப்பறைகள் இல்லை. அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் அவர்கள் அடக்கி வைக்க வேண்டும். வயதான ஓட்டுநர்கள் சிலர் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பைகளில் உச்சாவைப் பிடித்து வைத்து கொள்ளத்தான் முடியும்.

ராத்திரி பத்து மணிக்கு வண்டி எடுத்தால் காலை 08.00 மணி ஆகும், அடக்கிக் கொண்டுதான் போக வேண்டும்.

ஆனால் மலம் கழிப்பது என்பது முடியாத விஷயம். ஒரு நிமிடம்தான் ஸ்டேஷனில் நிக்கும், அடுத்து சிக்னல் விழுந்தவுடன் வண்டி எடுக்கனும். 110 kmph குறையாமல் வண்டி ஓட்டனும். பஞ்சுவாலிட்டி இருக்கு. இதிலே இன்ஜின் பிராபளம், டிராக்கில் ஏதேனும் பிராப்ளம், சிக்னல், மனிதர்கள் சூசைட் என கண் விழித்து ஓட்டனும்.!

கேட் horn அடிக்கனும்! 60 செகண்டுக்கு vcd பிரஸ் பன்னனும்! அசிஸ்டெண்ட் தூங்கிட்டா அவரை எழுப்பனும்! 19 kwh கரண்ட்டின் கீழ் வேலை! இன்ஜீன் சூடு!

ராத்திரியில் வண்டியின் வேகத்தைப் பொருத்து குளிரின் கொடுமை! எக்ஸஸ் ஸ்பீடு போகக் கூடாது! டிரையின் டைமிங் மெயிண்டன் பன்னனும்! சிவப்பு சிக்னலைத் தாண்டினால் ரிமூவ்டு ப்ரம் சர்வீஸ் எனப் பல அழுத்தங்கள் இருக்கு!

இருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கனும்! காடுகளில் போகும்போது செயின் இழுத்து வண்டி நிக்கும்போது யார் உதவியும் இரவு நேரத்தில் கிடைக்காது. சிங்கம், புலி, யானை என இருக்கும்.

டைம் குறைந்தாலும் விளக்கம் எழுதிக் கொடுக்கனும். இதேதான் பகல் நேரங்களிலும்! சரக்கு வண்டி எனில் எக்ஸ்பிரசுக்காக லூப் லைனில் ஒதுக்குவார்கள்... அப்போ ஸ்டேஷன் மாஸ்டர் ரூமுக்கு ஓடனும், அவர் வேண்டா வெறுப்பாக அனுமதிப்பார். முடியாத பட்சத்தில் வாட்டர் கேனில் தண்ணீர் இருந்தால், பொது வெளிக்கு மறைவா போய் இருக்க வேண்டியதுதான்!

சரக்கு வண்டியும் 16 டூ 18 மணி நேரத்துக்கும்மேல் வேலை செய்பவர்கள் உண்டு! இதில் சாப்பாடு பிரச்சனை இருக்கு! கடைகளைத் தேடி ஓடனும்! சாப்பிடும் நேரத்தில் வண்டி ஓட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

கண்ட்ரோலர்களோ "எல்லாரும்  சாப்பிட்டீர்களா, சாப்பாடு வாங்கி விட்டீர்களா?" எனக் கேட்பதும் இல்லை, அதற்கான நேரமும் ஒதுக்குவதில்லை!

நம்மைக் காட்டிலும் எல்லோரும் நன்றாக வாழ்கிறார்கள் என்று நினைப்பதும் நமக்குத் தான் சோதனையும் வேதனையும் அதிகம் என்று கலங்குவதும் எவ்வளவு முட்டாள்தனம் ! 

படித்ததில் பிடித்தது .....!

கிரெடிட் கார்டை இப்படிப் பயன் படுத்தினால் பிரச்னையே இல்லை!

பாம்பென்றால் படையும் நடுங்கும். ஆனால், பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களைவிட, கெடுக்கும் கடன்களால் பாதிக்கப்பட்டவர்கள்தாம் அதிகம். 
கிரெடிட் கார்ட் என்ற இன்றியமையாத போதை:

இதில் ஆழம் தெரியாமல் காலை விட்டது ஒரு காலம். இன்று ஆழம் தெரிந்தே வேறு வழியில்லாமல் இவற்றை உபயோகிக்கிறோம். நாம் வேலைக்குச் சேர்ந்த உடனேயே கிரெடிட் கார்ட் கம்பெனிகள் ஒரு கார்டை நம் தலையில் கட்டி விடுகின்றன. கிரெடிட் கார்ட் தரும் இலவசக்கடன், சேர்வதற்கு போனஸ், கேஷ் பேக் ஆஃபர்ஸ், நிறைய பொருள்களுக்குத் தள்ளுபடி, ஃப்ரீ பாய்ன்ட்ஸ் போன்ற வசதிகளைப் பார்த்து மயங்கிப் போகிறோம்!
வீட்டுக்கடன் வட்டி விகிதம் 8.5% என்றால், 8%-க்கு கிடைக்குமா என்று தேடும் நாம், கிரெடிட் கார்ட் வட்டி விகிதம் 36% - 41% என்று கவனிப்பதில்லை. கார்ட் கம்பெனிகளும் அதை நாசூக்காக 3.35% மாத வட்டி என்றே குறிப்பிடுகின்றன. நாம் தப்பித் தவறி கிரெடிட் கார்டில் பணம் எடுத்துவிட்டால், அடுத்த நிமிடத்தில் இருந்து விதிக்கப்படும் வட்டி 45 சதவிகிதம். அது தவிர, பணம் கையாளும் கட்டணம் வேறு.

கிரெடிட் கார்ட் லீலைகள்:
ஒரு ஸ்வீட் வாய்ஸ் செல்பேசியில் வந்து, ``இனி உங்கள் லிமிட் ஒன்றரை லட்சம்!” என்று ஏதோ லாட்டரி பரிசு தருவது போல இன்பத் தேனை ஊற்றும். ஒன்றரை லட்சத்துக்கு என்னவெல்லாம் வாங்கலாம் என்றுதான் எண்ணம் ஓடுமே தவிர, அந்த ஒன்றரை லட்சத்தை எப்படித் திருப்பிக் கட்டப்போகிறோம் என்ற கவலை அப்போது தோன்றாது.

கிரெடிட் கார்டை நாம் உபயோகிக்கும்போது முதல் 20 - 50 தினங்கள் வரை வட்டி விதிக்கப்பட மாட்டாது. ஒவ்வொரு முறையும் கெடு தேதிக்குள் பணத்தைக் கட்டி விடும் பட்சத்தில் வட்டியே இருக்காது. கிரெடிட் கார்டின் முக்கியக் கவர்ச்சி அம்சமே இந்த ஃப்ரீ கிரெடிட்தான். ஆனால், 8,000 ரூபாய்க்கு ஏதாவது வாங்கிவிட்டால் உடனே, ``ஐயோ, பாவம்! தவணைமுறையில் கட்டுங்களேன்!” என்று ஒரு குறுஞ்செய்தி பரிவு காட்டுகிறது. நாம் தவணைமுறையைத் தேர்ந்தெடுத்தவுடன் ஃப்ரீ கிரெடிட் ரத்தாகிவிடும். நம் கிரெடிட் ஸ்கோரும் குறைந்துவிடும். நமது கிரெடிட் கார்ட் லிமிட்டில் 30%-க்கு அதிகமாக நாம் செலவழித்தால் நம்மிடம் சரியான அளவு பண வரவு இல்லை என்று கிரெடிட் பீரோக்கள் முடிவு செய்து அப்போதும் ஸ்கோரைக் குறைக்கும். இதனால் பிற்காலத்தில் தேவைப்படும் வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவற்றைப் பெறுவதில் பாதிப்பு ஏற்படுகின்றன.

மேலும் கிரெடிட் கார்ட் நமது செலவுகளை அதிகரிக்கிறது. 24 இன்ச் டிவிக்கு பதில் 49 இன்ச் டிவி வாங்கியது, ஒரு டிரெஸ் வாங்கப்போய் மூன்றாக வாங்கிவந்தது - எல்லாமே கிரெடிட் கார்ட் தந்த தைரியம்தானே?

கிரெடிட் கார்டைத் தவிர்க்க வேண்டுமா?

இன்றைய சூழ்நிலையில் கிரெடிட் கார்ட் இன்றி வாழ்க்கை இல்லை. வருங்காலத்தில் நல்ல கடன்களைப் பெறுவதற்குத் தேவையான கிரெடிட் ஸ்கோரைப் பெறுவதற்கும் கிரெடிட் கார்டுகள் உதவும். ஏனெனில், கடன் வாங்காமலேயே இருப்பது கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கும். குறுகிய காலக் கடன்கள், நீண்ட காலக் கடன்கள், கிரெடிட் கார்ட் கடன்கள் போன்ற பலதரப்பட்ட கடன்களை வாங்குவதும், அவற்றை முறையாகத் திருப்பி செலுத்துவதுமே ஸ்கோரை அதிகரிக்கும் வழி.

கிரெடிட் கார்டை எப்படி சரியாக உபயோகிப்பது?

1. பணம் கட்டவேண்டிய தேதிக்குள் முழுப் பணத்தையும் கட்டிவிடுங்கள்; தவணைமுறையைத் தேர்வு செய்யாதீர்கள்.

2. கிரெடிட் கார்டில் பணம் எடுக்காதீர்கள்.

3. பல கார்டுகள் வைத்திருக்காதீர்கள். ஒவ்வொன்றுக்கும் கட்டணம் என்பதோடு ஒவ்வொன்றின் பணம் கட்டும் தேதியும் வேறு வேறாகிக் குழப்பும். அதிகபட்சம் ஒரு ஆட்ஆன் (add-on) கார்ட் வைத்துக்கொள்ளுங்கள். அதற்குக் கட்டணம் கிடையாது.

4. . கஸ்டமர் சர்வீஸுக்கு ஒரு போன் கால் செய்வதன் மூலம் உங்கள் லிமிட்டை நீங்களே நிர்ணயம் செய்யுங்கள். உங்கள் மாத வருமானத்தில் 50%-க்கு அதிகமாக லிமிட் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

5. கூடிய வரை பழைய கிரெடிட் கார்டுகளை மாற்றாமல் வைத்துக்கொள்வது ஒரு நீண்ட கடன் வரலாற்றைத் தெளிவாகக் காட்ட உதவும்.

கிரெடிட் கார்ட் என்ற கெடுக்கும் கடனை நல்ல கடனாக மாற்றுவது நம் கையில்தான் உள்ளது. ஆல் த பெஸ்ட்!

எந்த ஊரில் என்ன வாங்கலாம்.

திருப்பூர் - பனியன், ஜட்டி
உறையூர் - சுருட்டு

கும்பகோணம் - வெற்றிலை, சீவல்
தர்மபுரி - புளி, தர்பூசணி

உசிலம்பட்டி - ரொட்டி
நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்

பொள்ளாச்சி - தேங்காய்
வேதாரண்யம் - உப்பு

சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா

சாத்தூர் - காராசேவு, மிளகாய்

கோயமுத்தூர் - மோட்டார் உதிரிப் பாகங்கள், காட்டன்

திருநெல்வேலி - அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா

கோவில்பட்டி - கடலைமிட்டாய்
பண்ருட்டி - பலாப்பழம்

மார்த்தாண்டம் - தேன்
பவானி - ஜமுக்காளம்

மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து

திருப்பதி - லட்டு
மாயவரம் - கருவாடு

ராஜபாளையம் - நாய்
தூத்துக்குடி - உப்பு

ஈரோடு - மஞ்சள், துணி
தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை

நீலகிரி - தைலம்
திருபுவனம் - பட்டு

குடியாத்தம் - நுங்கு
கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்

ஆலங்குடி - நிலக்கடலை
கரூர் - கொசுவலை

திருப்பாச்சி - அரிவாள்
ஒட்டன்சத்திரம் - முருங்கைக்
காய், தக்காளி

ஓசூர் - ரோஜா
நாமக்கல் - முட்டை

பல்லடம் - கோழி
குன்னூர்-கேரட்                                                                                                                   

காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
நாகப்பட்டினம் - கோலா மீன்

திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்

பத்தமடை - பாய்
பழனி - பஞ்சாமிர்தம், 
விபூதி

மணப்பாறை - முறுக்கு, மாடு
உடன்குடி - கருப்பட்டி

கவுந்தாம்பட்டி - வெல்லம்
ஊத்துக்குளி - வெண்ணெய்

கொடைக்கானல் - பேரிக்காய்
குற்றாலம் - நெல்லிக்காய்

செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா

திருச்செந்தூர் - கருப்பட்டி
குளித்தலை - வாழைப்பழம்

ஆம்பூர் - பிரியாணி
சங்கரன் கோவில் - பிரியாணி

அரியலூர் - கொத்தமல்லி
சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை

கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்

பாண்டிச்சேரி - ஒயின், மதுபானங்கள்

ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி

கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
காரைக்குடி - ஓலைக்கூடை

செட்டிநாடு - பலகாரம்

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால். உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!

1.முதன் முதலில் *computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.*

Zero value நிலம் EC யில் *நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.*

2.Double Document நிலம்.

Power of attorney(POA) double document 

அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.

POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் *Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள்* POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.

அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது *power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா* என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.

3.உயில் பத்திர நில double document.

உயில் மூலம் உரிமை மாறி இருக்கா

 உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.
எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.

பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த *பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.*

4.Settlement பத்திர நிலம் double document .

*Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும்* 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.

*செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.*

EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.

உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.

5. *Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-double document.*

1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.

அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document.

6.Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?

அடுத்து *அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்.*

DTCP approved or CMDA approved என்றால் *DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம்.* Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.

அது *பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும்* layout ஆஹ் என்றும் விசாரியுங்கள்.

Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள் *நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள்.*

 எனவே ஜாக்கிரதை.

*பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது.* ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.

நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும் உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள்.

இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும். 

*VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால்  RTI மனுவில் கேளுங்கள் RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.*

4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள் .

5.*பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.*

கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு 

பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம்.

அதனாலே விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள் அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.

6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

 *நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை  புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கிவேண்டும்.*

7. பட்டாவின் பயனாளி யார்?.

முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ்  என்று பார்க்க வேண்டும்

மேஜர் இனாம்

ராயட்டு வாரி
1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.

இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.
------------

Minor இனாம் 
சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த   DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்

தொழில் முறை இனாம் நிலம்
----
தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன்,கர்ணம்,தலையாரி,
வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார்  இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.

சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.

ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.
------------

DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)
settlement etc யா என்று பார்க்க வேண்டும்.

மேற்சொன்ன வகை பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை.
---------

சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.

Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா என்று பார்க்க வேண்டும்.

*SC & ST பிரிவினற்கு கொடுத்த AD  assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.*

F-பட்டா.
இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு revenue டிபார்ட்மென்ட் வேறு.

ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.

1970-B-Memo land =பீமா பட்டா.

*B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர்.* ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. *B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.*

Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.

ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.
--------

 1956-பூமி தான நிலம்

Manual EC 
கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.

manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry  காட்டபட்டு இருக்கும்.

பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.

ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.

Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.

பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.

*பூமி தான நிலம்  வாங்காதீர்.*

பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. *பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு.*

எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.
-----------

Zero value நிலம்

-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.
-----------

கோயில் நிலம் -HR&CE நிலமா 

வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ்  என்று பார்க்க வேண்டும்.

கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக  இருக்க கூடாது அவ்வளவே.

கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.

கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.

இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.
-----------

ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.

land reforms act.
இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில் B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
-----

1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்

இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme.

RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்
மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்"  என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.

அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.
-------

1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம் 

தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.

ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.

இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும் m
--------
1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்

நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.

UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.

Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.
--------

1976 களின் Urban land seiling act

ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும்.

ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு  revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை.

8. *கோர்ட் attached property வாங்காதீர்.*

9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர். அந்த நிலத்தை அவர் மனைவி maintenance (ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.

எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.
---------------

10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.

11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,

12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )

13..அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.

1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு   80  to 100 வருடத்திற்கு வேண்டும்.

*1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.*

இதன்  நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்

1.அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.

2. அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.

ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து UDR இல்  திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றி கொண்டார்கள்.

14.அடுத்து *ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி )பண்ணிக்கணும்.*

15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.

16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள் இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள் 

17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்

18.அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின்  ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.

நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.

உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,

 லாயர் எங்கு படித்தார் எந்த ஆண்டில் இருந்து practise செய்கிறார் எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள் *புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.*

மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

கண்டுபிடிப்பது உங்கள் சமர்த்தியம்.

Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.

19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து *ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார்* பின்பு படத்தை வரைந்து தருவார்.

20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.

பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள் உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்களே.
========

காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.

திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர்  கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.
========

நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர்.

அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் jஅண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்.
இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...

இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.

நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-
01. IAS - Indian Administrative Service

02. IPS - Indian Police Service

03. IFS - Indian Foreign Service

04. IFS - Indian Forest Service

O5. IRS -Indian Revenue Service (Income Tax )

06. IRS- Indian Revenue Service ( Customs & Central Excise )

07. IAAS-Indian Audit and Accounts Service

08. ICAS-Indian Civil Accounts Service

09. ICLS-Indian Corporate Law Service

10. IDAS-Indian Defence Accounts Service

11. IDES-Indian Defence Estate Service

12. IIS  - Indian Information Service

13. IPTAS - Indian Post & Telecom Accounts Service

14. IPS - Indian Postal Service

15] IRAS - Indian Railway Accounts Service

16. IRPS - Indian Railway Personal Service

17. IRTS - Indian Railway Traffics Service

18. ITS - Indian Trade Service

19. IRPFS - Indian Railway Protection Force Service

20. IES - Indian Engineering Services

21. IIOFS  -   Indian Ordinance Factory Service

22. IDSE  -  Indian defence engineering services

23.  IES  - Indian Economics Services

24. ISS  - Indian Statistics Service

25. IRES - Indian railway engg service 

26. IREES -  Indian railway elec engg service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.

இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...

பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.

இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம்,
VAO பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.

இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.

எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம். 

இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இதை பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பு நண்பர்களே...

"அம்மா மட்டுமே அம்மாவுக்கு சமம்"

மனைவி இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்ட தந்தை மகனிடம் கேட்டார்...
இப்போ இருக்கிற புதிய அம்மாவை உனக்கு பிடித்திருக்கிறதா...
அப்போது மகன் சொன்னான்.
என் அம்மா என்னிடம் பொய் சொல்வார்...
ஆனாலும் இப்போ புதிதாக வந்திருக்கிற அம்மா என்னிடம்
என்னிடம் பொய் சொல்லவில்லை என்றான்.
இதைக் கேட்ட தந்தை உன் அம்மா சொன்ன பொய் என்ன என்று கேட்டார்.
அதற்கு அவன் நான் ஏதாவது சேட்டை பண்ணினால் உனக்கு இன்று சாப்பாடு கிடையாது என்று சொல்லிவிட்டு எனக்கு பசி எடுத்தவுடன் என்னை தூக்கி மடியில் உட்கார வைத்து பாசத்துடன் ஒவ்வொரு உருண்டையாக ஊட்டி விடுவார்.

ஆனால் தற்போது உள்ள அம்மா நான் சேட்டை பண்ணின போது என்னை அடித்து உனக்கு சோறு கிடையாது என்று சொன்ன வார்த்தையை இரண்டு நாட்களாக காப்பாற்றிக் கொண்டுள்ளார் என்றான்.
அவன் சொன்ன வார்த்தையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட அப்பா அவனை உடனடியாக தூக்கி ஓட்டலுக்கு கொண்டுபோய் உணவு வாங்கி கொடுக்கிறார் கண்ணீருடன்.

"அம்மா மட்டுமே அம்மாவுக்கு சமம்"
பூமியில் கண்களால் காணும் உண்மையான தெய்வம் அம்மா.
Love u maa

தவறாமல் படியுங்கள்.... 2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?என்னென்ன தொழில்கள் இருக்காது ??

இன்னும் ஐந்து வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது கூர்ந்து கவனித்துப் படியுங்கள்புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும்*

GOLDEN AGE COMING SOON?

தவறாமல் படியுங்கள்....
*2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?* 
*என்னென்ன தொழில்கள் இருக்காது ??*
நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...!

*1998 ல தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!* 
இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

*பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்!.*

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, *STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??*
எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்,  ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர்,  வாக்மேன், டிவிடி  பிளேயர் என சொல்லி கொண்டே போகலாம். குண்டு பல்பும்,  டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்ப LED பல்பு தான்.

*எதனால ? ஏன் இப்படினு கேட்டா?*

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையைவிட திறமையா செயல்படும் இதுங்கதான் மேலதிகமான காரணமா இருக்கும்.!
*உதாரணத்துக்கு சொல்லணும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?*

Uber'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது..!
*இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?*

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய Fees வாங்குவாரு..! இல்லையா...!
*இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  Section-னோட சரியான விவரங்கள Probabilities-டன் அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா?  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...! வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும்.*

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்ட சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது..!

*அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம்தான்!!!!*

ஆடிட்டர்கள் வேலையை cleartax,  taxman போன்ற இணையதளம்!,

*டாக்டர்கள் வேலையை Ada app!,*   

ப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr, 99acres, இணையதளம்!,

*கார் விற்பனையை carwale, cars24 இணையதளம் !*

என சேவை இலவசமாக தருகின்றன.

*UBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.*

ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்.

*நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில்  தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை.*

இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS app மூலம் எடுத்து கொள்ளலாம்.
 
 *80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.  'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்..!*

2025 ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.

2021 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது.

*அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்!.*

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா.. உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்.. இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

*இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் கனரக வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.*

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்

*எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு  நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை,  நீங்கள் எடுக்கும் முடிவுகளை தீர்மானம் செய்வது கூகுள்தான்.*

எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10 -15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

*இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க... இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.. குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா??*

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

*முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.*

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்.

*ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.*

*விவசாயம்:*👇 இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

*இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும். விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு  மாத்திரை தான் உணவு.*  

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

*'Moodies' ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது.. 2022 ல நீங்க பொய் சொல்றீங்களா, இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.*

இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளை செய்கிறது.

*இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012 ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.*

Tricoder - X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்டுக்கு வருது. உங்க செல்போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சுக் காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் *Clinic* வைக்கத் தேவையில்லாம, Online -ல யே ஒரு Op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital .

*மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.*

நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்கு சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்.

*கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்.* 

சந்திக்க தயாராவோம். 
எதிர்காலம்  நம் கையில் இல்லை.  
கடந்த காலமும் நிகழ்காலமும், 
நம் கையிலா இருந்தது என்கிறீர்களா..?
!!!!!!!!!!!!!👍

ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் நண்பரை கவர்ந்தது.

 “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”.
திரும்பி பார்த்தேன். 

ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். 

பக்கத்தில் இருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன். 

அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். 

நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. 

இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்).

“அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”.

கண்டிப்பாக..... 

சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். 

நூறு ரூபாய்க்கு ஆறு  ரூபாய் லாபம். 

முதல் நன்மை.

சார் நீங்கள் சூப்பர் மார்க்கேட் செல்ல வேண்டாம், நானே உங்கள் வீடு தேடி வந்துள்ளேன். நேரம், பெட்ரோல், மற்றும்  உழைப்பு மிச்சம். சிரமம் இல்லை.

இரண்டாவது:

சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ... 

சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும். 

( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களுடைய விளம்பரம்). 

இது 2வது நன்மை.

மூன்றாவது நன்மை என்ன என்று அறிய ஆவலுடன் அவரைப் பார்த்தேன். 

சார் சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் கேட்கும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டும். 

எங்களிடம் நீங்கள் விலை பேசி வாங்கலாம். 

நூறு ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு கேட்டாலும் தருவோம். 

ஏனென்றால் எங்கள் வயிற்றுப்பிழைப்பு இது. 

எங்களுக்கு வேறு வருமானம் ஒன்றும் இல்லை. 

20 ரூபாய் லாபம் இது மூன்றாவது நன்மை.

சரிதான் என்று தலையாட்டிவிட்டு அவரையே பார்த்தேன்.

 “சார் நான்காவது இந்த காய்கறிகள் பக்கத்து கிராமங்களில் நாங்களே இயற்கையாக பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒன்றும் தெளிக்காமல் விவசாயம் செய்தது. 

இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த தீங்கும் வராது சார்...

அவர் சொல்வது அனைத்தும் சரியாகவே எனக்கு பட்டது. 

மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து, விஷம் சேர்த்த காய்கறிகளை கியூவில் நின்று வாங்குவதற்கு தயாராகும் நாம் இதையெல்லாம் சிந்திக்கிறோமா?.....

சிந்தனையில் நிற்கும்போதே நான் கொடுத்த லிஸ்டில் உள்ள காய்கறிகளை பேக் செய்து கொடுத்தார். 

அவர் கேட்ட தொகையை கொடுத்தேன். 

பிறகு நான் அவரிடம், “எல்லாம் சரி ஐந்தாவது நன்மை என்னவென்று சொல்லவே இல்லையே” என்றேன் ஆவலுடன்.

“இது என்னுடைய மனைவி இவளுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. 

இவளுடைய மருத்துவத்திற்காக நான் யாரிடமும் கையேந்தியதில்லை. 

நீங்கள் விலை பேசாமல் கொடுத்த இந்த பணத்தின் ஒரு பகுதி இவளுடைய மருத்துவ செலவிற்கு உபயோகப்படும். 

இதுவும் நீங்கள் செய்யும் ஒரு சாரிட்டிதான் இதற்குரிய நன்மை இறைவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும். புண்ணியம் கிடைக்கும்.

இதுதான் நான் சொன்ன ஐந்தாவது நன்மை.

புன்னகையோடு அவர் சொல்லி நிறுத்தினாலும் அவருடைய கண்கள் நிறைந்திருந்தது நானும் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றேன்.

இது போன்ற துக்கங்களும், துயரங்களும் வழியோரங்களில் வியாபாரம் செய்யும் பலருக்கும் இருக்கலாம். 

நம்மால் இவர்களுக்கெல்லாம் உதவ முடியுமா???.

கோடிக்கணக்கில் மூலதனமுள்ள சூப்பர் மார்க்கெட் முதலாளிகளுக்கும், கார்ப்ரேட்டுகளுக்கும் பாக்கெட் நிறைக்க நாம் கொடுப்பதில் ஒரு பங்கை இதைப்போன்ற வழியோர வியாபாரிகளுக்கும் கொடுத்து உதவுவது அல்லவா உண்மையில் தொண்டு..!!!

அனைவரும் அறிய ஷேர் செய்யுங்கள்..
இதை குறைந்தது பத்து பேருக்காவது அனுப்பி வையுங்கள் அதனுடைய புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை !

உன்னிடம் என்ன கேட்டேன்
மலரெனும் காதல் கேட்டேன்
உன்னிடம் என்ன கேட்டேன்
அன்பெனும் முத்தம் கேட்டேன்
உன்னிடம் என்ன கேட்டேன்
உன்னிலிருக்கும் என்னைக் கேட்டேன்
உன்னிடம் என்ன கேட்டேன்
உன்னுடன் தனிமை கேட்டேன்

தந்தாயா ... தந்தாயா ... தங்கமே ..?

காதல் கொண்டாய் !
முத்தம் தந்தாய்
முடிவின்றி மொத்தமாய்
பெற்றுக் கொண்டாய் !
என்னைக் கேட்ட உன்னிடம்
உன்னையே தந்தாய் !
தனிமை கேட்ட என்னிடம்
மஞ்சள் நாண் தந்தாய்
மங்களம் கண்டாய்
இருவர் கூடி - முடிவில் ...
ஈரிரு நால்வர்  தந்தாய் ..!

கண்ணே !
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
நல்லதோர் குடும்பம் கண்டு
சொர்க்கம் தந்தாய் தங்கமே !

#பருத்திஇக்பால்.

என்ன ஆயிற்று, எப்படியாவது மேலே வாடா !!

சிறுவனும் அன்னையும் வழக்கமாகச் செல்லும் பாதை தானாம். பார்வைக் குறைபாடு கொண்டவர் எனினும் இடது ஓரமாகவே தன் மகனை எப்போதும் அழைத்துச் செல்பவராம். அன்று அன்னைக்கும் மகனுக்குமான சுவரசியப் பேச்சினூடே, மகன் எதையோ காண்கிறான், தன் கையுயர்த்தி அதை அன்னைக்கும் காட்ட விழைகிறான், பாதை விலகி விடுகிறான், கணப்பொழுதில் அது நிகழ்ந்து விடுகிறது. 


இரும்புத் தண்டவாளத்தின் மீது விழுந்தாலும், எத்தனை வேகமாக எழுகிறான் பாருங்கள். பயமில்லை! திணறவில்லை! காரணம், பார்வையற்ற அன்னைக்கு நாம் தானே கண்கள் என்பதை அவன் நன்றாகவே அறிவான், ஆனால் அவனது உயரத்தை விட சற்று உயரமாக மேடை அமைந்து போனது தான் துயரம். அதே நொடி தான் பாதை விலகி விட்டோம் என்று தரையைத் தடவி உணர்ந்து கொள்கிறாள் அன்னை. தவறு, பெருந்தவறு செய்துவிட்டேன், எங்கிருக்கிறோம், என்ன ஆயிற்று, எப்படியாவது மேலே வாடா !! எனப் பதறியிருக்க வேண்டும், ரயில் சத்தம் வேறு மிரட்டியிருக்கும், மகன் ஒரு புறம் கதற, பார்வையற்ற அன்னை ஒரு புறம் பதற, புயலென ஓடி வருகிறான் மீட்பன். 

சரளைக் கற்களின் மீது சாதாரணமாக ஓடுவதே அசாத்தியம், அதிலும் எமனென எதிரில் வரும் ரயிலை எதிர்த்து ஓடுவதெல்லாம் இறை சக்திக்கு அப்பாற்பட்ட அதி சக்தி. உதவும் குணம் கொண்ட மனிதருக்கே அது வாய்க்கப்பட்டது. அத்தனை வேகமாக ஓடி வரும்போது 'உன்னால் முடியுமா' என அவரைக் குறுவினாடி தயங்கி யோசிக்க வைத்தது அனிச்சை குணம் கொண்ட மூளை.. ஓடு நண்பா ! உன் உயிரை விட குழந்தை முக்கியம் என தொடர்ந்து ஓட வைத்தது அன்பு குணம் கொண்ட இதயம். 

நண்பருக்கு இக்காணொளியை அனுப்பினேன் ! எல்லாம் வல்ல இறைவன் அவரை எப்படி ஓட வைத்தார் பாருங்கள் என்றார்.

இல்லை சார் ! ஓடியதே இறைவன் தான், பெயர் மயூர் ஷெல்க்கே ! என்றேன்.
//shared

உடல் பாகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.

உங்கள் உடலின் பாகங்களை பயமுறுத்தாதீர்கள்.
1) காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது.

2) 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது.
3) இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும்போது பித்தப் பை பயப்படுகிறது.
4) ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும் போது சிறுகுடல் பயப்படுகிறது.
5) நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடும் போது பெருங்குடல் பயப்படுகிறது.
6) சிகரெட் மற்றும் பீடி போன்ற புகை, அழுக்கு மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்றை நீங்கள் சுவாசிக்கும்போது நுரையீரல்கள் பயப்படுகின்றன.
7) அதிகப்படியான வறுத்த உணவு, ஜங்க், துரித உணவுகளை உண்ணும் போது கல்லீரல் பயப்படுகிறது.
8) அதிக உப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவைச் சாப்பிடும் போது இதயம் பயப்படுகிறது.
9) சாப்பிடச் சுவையாகவும் மற்றும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும்போது கணையம் பயப்படுகிறது.
10) இருட்டில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும்போது கண்கள் பயப்படுகின்றன.
11) எதிர்மறை (நெகடிவ்) எண்ணங்களைச் சிந்திக்க ஆரம்பிக்கும் போது மூளை பயந்து போகிறது.
உங்கள் உடலின் பாகங்களில் அக்கறை கொள்ளுங்கள். அவற்றை பயமுறுத்தாதீர்கள்.
இந்த உடல் பாகங்கள் அனைத்தும் சந்தையில் எளிதாகக் கிடைப்பதில்லை.
கிடைத்தாலும் மிகவும் விலை உயர்ந்தவை.
அநேகமாக உங்கள் உடலும் ஏற்றுக் கொள்ளாது.
எனவே நம் உடல் பாகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.

கண்மூடித்தனமான கொண்டாட்டங்கள்

பிறந்த நாள் கொண்டாட்டம், 
திருமணக் கொண்டாட்டம், 
புத்தாண்டுக் கொண்டாட்டம், 
காதலர் தினக் கொண்டாட்டம், 
நண்பர்கள் தினக் கொண்டாட்டம்
முதலான கொண்டாட்டங்கள் 
ஊடகங்கள்
பெற்றுப்போட்டவை.  
தமிழன் கொண்டாடிய
தைத்திருநாள் கொண்டாட்டம் 
ஏழைகளை மகிழச் செய்தது;
விவசாயிகளைச் சிரிக்கச் செய்தது. 

இன்றைய இளைஞர்கள் 
கொண்டாடுகிற
திருமணக் கொண்டாட்டத்தால்
யாருக்கு என்ன பயன்?
கேக்கை வெட்டி 
மாப்பிள்ளை முகத்தில் 
அப்புவதா மகிழ்ச்சி?
கேக்கை முகத்தில் 
வீசியெறிவதா மகிழ்ச்சி?‏
வண்ண வண்ண 
அலங்காரத் துகள்களை
அள்ளியெறிவதா மகிழ்ச்சி? 
இதனால் யாருக்கு
என்ன பயன்?
ஆண்டின் முடிவில் 
ஆபத்தோடு விளையாடும்
இளைஞர்களின்
புத்தாண்டுக் கொண்டாட்டம். 
இது ஒரு 
கண்மூடித்தனமான கொண்டாட்டம். 

மதுவைப் பருகிவிட்டு
கண்மண் தெரியா வேகத்தில்
வாகனத்தில் சீறிப் பாய்வது
என்ன வகை கொண்டாட்டம்?
அப்பாவி மக்களை
அச்சுறுத்துவதும் 
ஆபத்தை விளைவிப்பதும்
என்ன வகை கொண்டாட்டம்?

கொண்டாட்டம் என்பதென்ன?
நாம் மகிழ்வதும்
நம்மால் பிறர் மகிழ்வதுமே. 

சீர்கெட்ட வேகத்தில் 
சீறிப்பாய்வதால் 
யார் மகிழ்ந்தார்? - முரணாக
உன்னைப் பெற்றெடுத்தோர் 
உன்னை இழந்தார். 

சாலையில் செல்வோரை
சந்தூக்கில் ஏற்றுவதா
உன் கொண்டாட்டம்?
பாதையில் செல்வோரைப் 
பாடையில் ஏற்றுவதா
உன் கொண்டாட்டம்?

கடந்துவிட்ட நாள்களைக்
காசு கொடுத்து வாங்க முடியாது.
எதிர்காலத்தையேனும் 
எப்படிப் பயன்படுத்துவதெனத் 
திட்டமிடு; தீர்மானம் கொள். 

காலத்தைக் கட்டிப்போட்டுப் 
பயன்படுத்தினால் 
காலம் உன்னை மதிக்கும். 
இல்லையேல்
காலம் உன்னை மிதிக்கும்
நினைவில் கொள். 

-நூ. அப்துல் ஹாதி பாகவி
சென்னை
19.12.2020   03 05 1442

பதிவர்

நூ அப்துல் ஹாதி பாகவி 
===================

இதன் பெயர் 'ACANTHOSIS NIGRICANS'

இன்சுலின் எதிர்ப்புத்தன்மை
--------------------------------------------------
அரவிந்த ராஜ் 

இன்று நாம் பார்க்கப்போகும் தலைப்பு கீழுள்ள புகைப்படத்தை பற்றியே !!

இதை பார்த்ததும் 'அட... இது எனக்கு இருக்கே, எனக்கு தெரிஞ்ச நண்பருக்கு இருக்கே' என உங்களில் பலர் நினைக்கலாம்.

இதன் பெயர் 'ACANTHOSIS NIGRICANS'

பின்னங்கழுத்து, கழுத்தின் ஓரங்களில் கருப்பாக தட்டையாக இருக்கும் இதை சரிசெய்ய தமிழர்கள் தொன்றுதொட்டே கடலைமாவு, முல்தானி மட்டி போன்றவற்றை தடுவுவதை கண்கூட பார்த்திருக்கிறோம்.

ஆனால், அது நிரந்தரமாய் மறைந்துவிட்டதா எனக் கேட்டால் பதில் 'ஹூம்ஹூம்' என்பதே. ஏன் மறையவில்லை ?? இதை படித்து முடிக்கையில் உங்களுக்கே புரியும்.

இந்த ACANTHOSIS NIGRICANS ஏற்பட மிகமுக்கிய காரணம் 'Insulin Resistance' (இன்சுலின் எதிர்ப்புத்தன்மை)

Insulin Resistance என்றால் என்னவென நான் கூறுவதற்கு முன்பாக இன்சுலின் என்றால் என்ன? அதன் பணி என்ன? என்பதை கூறுகிறேன்.

நமது மனித உடல் பல்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அதில் 'கணையம்' என்னும் பகுதி உற்பத்தி செய்யும் மிகமுக்கிய ஹார்மோன் இந்த 'இன்சுலின்'.

இன்சுலின் நமது நண்பன். அதன் பணி என்னவென்றால், எப்போதெல்லாம் நம் உண்ணும் உணவு செரிமானமாகி ரத்தத்தில்  சர்க்கரை அளவை கூட்டுகிறதோ, அப்போது இன்சுலின் சுரக்கும். சுரந்த இன்சுலின் ரத்தத்தில் அதிக அளவில் உள்ள சர்க்கரையை குறைக்க நமது உடலில் உள்ள செல்களுக்கு உள்ளே அவற்றை சேமித்துக்கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கும். செல்கள் அந்த சர்க்கரையை சேமித்து, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க இன்சுலின் உதவும்.

இப்போது நாம் அதிக மாவுச்சத்து நிரம்பிய உணவை உட்கொள்கிறோம் என்றால் சர்க்கரை அளவு எக்கச்சக்கமாய் அதிகரிக்கும்; விளைவாக கணையம் நிறைய இன்சுலினை சுரக்க ஆயத்தப்படும். இதே போன்று பல்வேறு வாரங்களாக, மாதங்களாக, கணையம் நிற்காமல் மிகஅதிக அளவில் இன்சுலினை சுரக்கும். ஒருகட்டத்தில், நானும் 'எவ்ளோ அடிதான் தாங்குவேன்' என உடலில் உள்ள செல்கள் 'என்னால் இதற்கு மேல் சர்க்கரையை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் நிரம்பிவிட்டேன்' என கைவிரித்துவிடும். எவ்வளவு இன்சுலின் சுரந்தாலும் செல்கள் அவற்றை ஏற்காத காரணத்தால் ரத்தத்தில் சர்க்கரை ஏறிக்கொண்டே போகும். இது தான் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை. அதாவது உடலில் அதிகமாக இன்சுலின் சுரக்கும். ஆனால், அவற்றின் கட்டளைக்கு செல்கள் அடிபணியாது.

ரத்தத்தில் அதிகமான சர்க்கரை கொழுப்பாக நமது உடலில் சதைக்கு கீழே சேமிக்கப்படும். தொப்பை போடும்; உடல்பருமன் உண்டாகும்; நீரிழிவு, ரத்தஅழுத்தம் ஏற்படும். இவ்வாறாக பல உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பை போன்று நமது தோலில் ஏற்படும் ஒரு மாற்றம் தான் இந்த 'Acanthosis Nigricans'.

எனவே, இப்படியாக உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஆரம்பித்துவிட்டது என்பதை உணர வேண்டும்.

இதை நிவர்த்தி செய்ய கணையத்திற்கு சிறிது ஓய்வளித்து, இன்சுலினை அதிக அளவு தூண்டாமல் இருப்பதே சரி என்பதை உணர்தல் வேண்டும்.

எனவே,

1.மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்

2.எண்ணையில் பொறித்த உணவுகள், பேக்கரி உணவுகளில் உள்ள 'Refined Carbohydrates' வகையறாக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3.உடல் பருமன் கொண்டவர்களுக்கு இது பரவலாக இருக்கும். ஆகவே, மாவுச்சத்தை குறைத்து உண்டு தினசரி 30 நிமிடம் நடக்க வேண்டும். அதேபோன்று, உடலில் தேவையற்ற சர்க்கரை கொழுப்பாக மாறியுள்ளது அல்லவா?? அதை எரிக்க நாம் உண்ணாவிரத முறையையும் கடைபிடிக்கலாம். உண்ணாவிரதம் மூலம் உடலில் சேமிப்பு நிலையில் உள்ள கொழுப்பு நன்றாக எரியும்.

4.இப்படியானவர்களில் பலருக்கு ஆரம்ப கால நீரிழிவு (Pre-Diabetes) இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, மருத்துவரை ஆலோசித்து தகுந்த ஆலோசனை பெற வேண்டும்.

5.பெண்களுக்கு PCOD எனப்படும் சினைப்பை கட்டியின் ஒரு அறிகுறி இது. இதையும் உறுதிபடுத்திக்கொண்டு தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.

6.தற்போதைய சூழலில் உடல்பருமன் கொண்ட குழந்தைகள் பலருக்கு இது இருக்கும். பெற்றோர் இது வெயிலில் சுற்றுவதால் வந்தது, அழுக்கு என நினைக்க வேண்டாம். நீங்கள் கொடுக்கும் தின்பண்டங்கள், நொறுக்குத்தீனியில் உள்ள சர்க்கரையின் விளைவே இது. ஆகவே, குழந்தைகளுக்கு இது ஏற்பட்டால் எச்சரிக்கையாக பெற்றோர் செயல்பட வேண்டும்.

நீங்களாகவே எந்த ஆலோசையும் இன்றி க்ரீமை பூசிக்கொள்ள வேண்டாம். அது தவறு !!

நன்றி. ❣️

Dr.Aravindha Raj.